தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம்..!

Default Image

தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. 

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின். பெண்கள்  அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கூறுகையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுக்க முழுக்க தமிழகத்தைப் போல் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படும் என்றும், நவீன வசதியுடன் பெண்களுக்காக 200 இலவசப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்