புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச பேருந்து..! கொடியசைத்து துவக்கி வைத்த ஆளுநர் மற்றும் முதல்வர்..!

Default Image

புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த 20202-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.

இந்த நிலையில், சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் பாதிப்பு உள்ளாகினார்.  இதனால், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இன்று புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த  நிகழ்வை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். மேலும், மதிய உணவுடன் முட்டை தரும் பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்