பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸூம்,இந்தியாவும் கைகோர்த்து பணியாற்றும் என அந்நாட்டு கூறினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். மக்ரோனை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றார். மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர்.