ராஜஸ்தானில் மேலும் 4 பேர் பலி..123 பேருக்கு கொரோனா உறுதி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜஸ்தானில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை நாள்தோறும் அந்தந்த மாநில சுகாதர அமைப்பு வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் 42,533 பேர் பாதிக்கப்பட்டு, 1,373 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,533 பேரில் 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 2,115 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து குஜராத்தில் 5428, டெல்லியில் 4549, தமிழ்நாட்டில் 3023, ராஜஸ்தானில் 2886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3009 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள். ஏற்கனவே அங்கு 71 பலியாகியுள்ள நிலையில், தற்போது 75 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1005 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 1356 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தற்போது கொரோனா வார்டில் 1578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago