மோசடி புகார் – முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு பிடிவாரண்ட்…!

Published by
Edison

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் சேவைப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்க்கு பிணையில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை – ரூ .71.50 லட்சம் மானியம்:
உத்திரபிரதேசத்தின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்குவதற்காக 2010 மார்ச் மாதத்தில்,லூயிஸ் நடத்தி வரும் டாக்டர் ஜாகிர் உசேன் அறக்கட்டளை மத்திய அரசிடமிருந்து ரூ .71.50 லட்சம் மானியம் பெற்றது.
இதனையடுத்து,2012 ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் அலுவலர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.அப்போது,குர்ஷித்  மத்திய அமைச்சராக இருந்தார்.
இதனால்,பொருளாதார குற்ற பிரிவு விசாரணையைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 2017 இல், EOW இன்ஸ்பெக்டர் ராம் ஷங்கர் யாதவ்,கயம்கஞ்ச் காவல் நிலையத்தில் லூயிஸ் குர்ஷித் மற்றும் பாரூக்கி ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.
குற்றப்பத்திரிகை:
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 2019 டிசம்பர் 30 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில்,மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உத்திரபிரதேசத்தின் மூத்த அதிகாரிகளின் கையொப்பங்கள் போலியானவை என்றும் அவற்றின் போலி முத்திரைகள் மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெற பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால்,இதனை அறக்கட்டளை மறுத்து எட்டாவா, ஃபாரூகாபாத், காஸ்கஞ்ச், மெயின்பூரி, அலிகார், ஷாஜகான்பூர், மீரட், பரேலி, மொராதாபாத், ராம்பூர், சாந்த் கபீர் நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும்,குழந்தைகள் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும்,அதனை,அறக்கட்டளையின் இயக்குநர் லூயிஸ் குர்ஷித் அதை மே 2010 இல் சரிபார்த்ததாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஊனமுற்றோருக்கான முகாம்கள் நடத்தப்பட்டது என்பது பேப்பரில் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.
நீதிமன்ற தீர்ப்பு:
இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உத்திரபிரதேச மாநிலத்தின் பருக்காபாத் நீதிமன்றம்,லூயிஸ் குர்ஷித்க்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.மேலும்,ஆகஸ்ட் 16ம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published by
Edison

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

46 minutes ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

1 hour ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

2 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

4 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

4 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

4 hours ago