ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் பஹாடியா கொரோனாவால் உயிரிழப்பு!

Published by
Rebekal

ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் முக்கியமாக அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலர் தொடர்ந்து உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக 1980 முதல் 1981 வரை செயல்பட்டவர் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகநாத் பஹாடியா. இவர் கவர்னராக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகநாத் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெகநாத் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி ஜெகநாத் அவர்களின் மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகநாத் அவர்களது மறைவிற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago