பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப்பின் முன்னாள் தலைவருமான சுனில் ஜாகர், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக தலைமையால் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய சுனில் ஜாகர், காங்கிரஸுக்கு Goodbye and good luck என கூறி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்சியை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தார். பாஜக கட்சியை எதிர்த்துப் போராடும் வகையில், காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வரும் நிலையில், இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஜாக்கரை கட்சியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு பரிந்துரைத்தது. கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்த பின்னர், முன்னாள் முதல்வர் சன்னியை விமர்சித்து, கட்சிக்கு அவரே பொறுப்பு என்று கூறினார். சன்னியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக கட்சித் தலைமையையும் ஜாகர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…