பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பின்னர், அமித்ஷாவை சந்தித்து அமரீந்தர் சிங் பேசியதால் பாஜகவில் இணைப்போவதாக கூறப்பட்டது.
பிறகு அமிரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அமரீந்தர் சிங் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததில் இருந்து, இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து யூகங்கள் எழுந்தன. இன்று சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பின் போது அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் தனது கட்சியின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. மேலும், கட்சிக்கான பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மக்களுக்கு வாக்குறுதியளித்த தனது தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்றார். 4.5 வருடங்களில் நான் இருந்தபோது (முதல்வர் நாற்காலியில்) நாங்கள் என்ன சாதித்தோம் என்பது குறித்த ஆவணங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நான் பொறுப்பேற்ற போது இது எங்களின் தேர்தல் அறிக்கை. நாம் என்ன சாதித்தோம் என்பதற்கான ஆவணமும் உள்ளது என தெரிவித்தார்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…