புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தூக்கிட்டு தற்கொலை!
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை.
புதுச்சேரி உழவர்கரை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வில்லியனுரில் உள்ள தனது வீட்டில் குடும்ப தகராறு காரணமாக நடராஜன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 1996-ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் நடராஜன்.