டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான 87 வயதுடைய மன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. பின்னர் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்பிடுவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…