சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர் பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டார். ராஜிந்தர் பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது, தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
ராஜிந்த்பால் சிங் பாட்டியா ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தார். 2003 ஆம் ஆண்டில், ராஜிந்தர்பால் சிங் பாட்டியாவிற்கு பாஜக சார்பில் சட்டமற்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதனுடன், அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. இருப்பினும், 2008 தேர்தலில், அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. 2013 ஆம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அவர் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
பாட்டியாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாட்டியாவுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகு பாட்டியாவிற்கு சில உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…