கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் வீடு வசதி துறை அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஊரடங்கிற்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் கோலாகலமாக சுற்றத்தார் மட்டும் சூழ பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது.
பெங்களூருக்கு வெளியில் ராமநகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சுற்றத்தார் மட்டும் சூழ இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருவீட்டார் உருவாவினர்களும் 40 கார்களில் வந்துள்ளனர். இந்த 40 காரின் விவரங்கள் மட்டும் ராமநகர் காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு அமலில் இருக்கும் போது மக்கள் அதிகமாக கூடும் எந்தஒரு விழாக்களுக்கும் அரசு அனுமதி அளிப்பதில்லை. அப்படி இருக்கையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி தரப்பு, இந்த திருமணம் நடப்பதற்கு ஏற்கனவே அரசிடம் உரிய அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவித்தனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…