கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃபலேரோ மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோவாவின் முன்னாள் முதல்வர், 7 முறை எம்.எல்.ஏ மற்றும் கோவாவின் பெரிய அரசியல் முகமான லூய்சின்ஹோ பலேரோ இந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸில் இருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, பாஜக மற்றும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளை தோற்கடிப்பேன் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கியது. மேலும் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதாக அறிவித்தது. அதே மாதத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் ராஜ்யசபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக லூய்சின்ஹோ பலேரோவை அறிவித்தது. பின்னர், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை லூய்சின்ஹோ பலேரோ தாக்கல் செய்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அர்பிதா கோஷ் ராஜினாமா செய்ததையடுத்து காலியாக இருந்த அந்த இடத்த்திற்கு நவம்பர் 29-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இருப்பினும், ஃபலேரி ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபலேரோவை கட்சியில் சேர்த்துவிட்டு இப்போது ராஜ்யசபாவுக்கு அனுப்புவது கோவாவில் கட்சி அமைப்பை பலப்படுத்தும் மம்தா பானர்ஜியின் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் பல தலைவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டு, முக்கிய பதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…