முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நேற்றைய தினத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் மத்திய நிதித்துறை செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் லவாசா பதவி விலகியதை அடுத்து ராஜீவ் குமாரை புதிய தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இன்று முதல் ராஜீவ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…