பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பாஜக முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாஜக-வில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது இவர், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதே அக்கட்சியில் இணைந்து, அவரை ஆதரிக்க சரியான தருணம் என்றும், இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே பலவீனமாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் வலிமை, ஜனநாயக அமைப்புகளில் தான் உள்ளது என்றும், நாட்டு முன் எப்போதும் இல்லாத அளவில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பதாகவும், வாஜிபாயின் ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதா ஒருமித்த கருத்தை நம்பியதாகவும், ஆனால், தற்போதைய பாரதிய ஜனதா அரசு மாற்று கருத்தை நசுக்குவதையும், வெல்வதையும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…