உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்தியாவிலும் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனாலும் சிலர் அரசாங்க உத்தரவை மீறி வெளியே செல்லும் பொழுது, காவல்துறையினர் சில கடுமையான தண்டனைகளும் கொடுத்து வந்தனர். அதேசமயம் சில இடங்களில் வித்தியாசமான முறையில் நூதன தண்டனைகளும், விழிப்புணர்வுகளும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி ஊரிலிருந்து வந்து ரிஷிகேஷ் என்னும் நகரில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டினர் கங்கை நதிக்கரையோரம் நேற்று சுற்றி திரிந்தனர். அந்நேரம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வெளிநாட்டினர் என்பது தெரியவந்து உள்ளது.
எனவே இந்த பத்து பேரையும் “நான் ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற வில்லை என்னை மன்னித்து விடுங்கள்” என 500 முறை தனித்தனியாக எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர். தாங்கள் செய்த தவறை உணர்ந்து எழுதிய வெளிநாட்டினருக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…