Indian civil service [file image]
ஹைதராபாத்: IRS அதிகாரி எம்.அனுசுயாவின் கோரிக்கையை ஏற்று அவரது பெயரை அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை ஆணாகவும் மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய குடிமைப் பணிகளில் முதல்முறையாக, ஹைதராபாத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட IRS அதிகாரியின் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது நிதியமைச்சகம்.
எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் ஒரு அதிகாரி இவ்வளவு அங்கீகாரமும் அனுமதியும் பெறுவது இதுவே முதல் முறை.
இவர், சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் அங்கு அவர் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் ஆகியவற்றில் பிஜி டிப்ளமோ படித்து முடித்துள்ளார்.
சூர்யா 2013-இல் சென்னையில் உதவி ஆணையராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்குப் பிறகு, 2018 இல் அவர் துணை ஆணையராகப் பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) தலைமை ஆணையரின் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…