மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்ஹாஸ் நகரை சார்ந்தவர் பிராஞ்ஜல் பாட்டில்(31). இவர் தனது ஆறு வயதில் பார்வை இழந்தார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்தினார்.
பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 773 வது இடம் பிடித்ததால் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. பார்வைக்குறைபாடு இருந்ததால் பணி ரத்து செய்யப்பட்டது. பின்னர் மனம் தளராமல் 2017-ம் ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.இந்த தேர்வில் 124 -வது இடத்தை பிடித்தார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ .ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார். பின்னர் எர்ணாகுளத்தின் உதவி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பிராஞ்ஜல் பாட்டில் நேற்று பதவி ஏற்றார். ஏற்கனவே எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவத்தின் மூலமாக இந்த பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…