ராணுவ தின அணிவகுப்பு, முதல் முறையாக பெங்களூருவில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவின் 75வது ராணுவ தின அணிவகுப்பு, பெங்களூருவில் முதன்முறையாக ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் மாநிலமாக கர்நாடகா நடத்தும் இந்த ராணுவ தின அணிவகுப்பு, தலைநகர் டெல்லிக்கு வெளியே நடக்கும் முதல் அணிவகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம். கரியப்பா, ஆங்கிலேயரான ஜெனரல் சர் பிரான்சிஸ் ராய் பச்சரிடமிருந்து, முதல் இந்தியத் தலைமைத் தளபதியாக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி-15 ஆம் தேதி ராணுவதினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அணிவகுப்பில் இராணுவப் படையின் குழு மற்றும் 5 படைப்பிரிவு இசைக்குழுக்கள், உட்பட 8 குழுக்கள் பங்கேற்கின்றனர் என இராணுவ அதிகாரி தெரிவித்தார். இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு ஆயுத அமைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.
கே9 வஜ்ரா துப்பாக்கிகள், பினாகா ராக்கெட்டுகள், டி-90 டாங்குகள், பிஎம்பி-2 காலாட்படை வாகனம், துங்குஸ்கா வான் பாதுகாப்பு அமைப்பு, 155 மிமீ போஃபர்ஸ் துப்பாக்கிகள், லைட் ஸ்டிரைக் வாகனங்கள், ஸ்வாதி ரேடார் ஆகியவை அடங்கும், என்று அணிவகுப்பு தளபதி கூறினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…