டெல்லிக்கு பிறகு முதல் முறையாக, பெங்களூருவில் நடக்கும் ராணுவ தின அணிவகுப்பு.!
ராணுவ தின அணிவகுப்பு, முதல் முறையாக பெங்களூருவில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவின் 75வது ராணுவ தின அணிவகுப்பு, பெங்களூருவில் முதன்முறையாக ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் மாநிலமாக கர்நாடகா நடத்தும் இந்த ராணுவ தின அணிவகுப்பு, தலைநகர் டெல்லிக்கு வெளியே நடக்கும் முதல் அணிவகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம். கரியப்பா, ஆங்கிலேயரான ஜெனரல் சர் பிரான்சிஸ் ராய் பச்சரிடமிருந்து, முதல் இந்தியத் தலைமைத் தளபதியாக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி-15 ஆம் தேதி ராணுவதினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அணிவகுப்பில் இராணுவப் படையின் குழு மற்றும் 5 படைப்பிரிவு இசைக்குழுக்கள், உட்பட 8 குழுக்கள் பங்கேற்கின்றனர் என இராணுவ அதிகாரி தெரிவித்தார். இந்திய ராணுவத்திடம் உள்ள பல்வேறு ஆயுத அமைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.
கே9 வஜ்ரா துப்பாக்கிகள், பினாகா ராக்கெட்டுகள், டி-90 டாங்குகள், பிஎம்பி-2 காலாட்படை வாகனம், துங்குஸ்கா வான் பாதுகாப்பு அமைப்பு, 155 மிமீ போஃபர்ஸ் துப்பாக்கிகள், லைட் ஸ்டிரைக் வாகனங்கள், ஸ்வாதி ரேடார் ஆகியவை அடங்கும், என்று அணிவகுப்பு தளபதி கூறினார்.