Categories: இந்தியா

சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை.!

Published by
மணிகண்டன்

சென்னை : சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் முதன் முதலாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்ப்பட்டுள்ளது. – மத்திய உள்துறை அமைச்சகம்.

நாடளுமன்றத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டமானது (CAA) கடந்த மார்ச் மாதம் 11ஆம் அமல்படுத்தப்பட்டது.  அச்சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் என இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 11 முதல் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதன் முதலாக 14 பேருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த C.A.A சட்டமானது அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர்களுக்கு பொருந்தாது என்றும், இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒரே மேட்சு தான்., கேப்டன் தோனி சொன்ன அந்த வார்த்தை.., கொண்டாடும் ரசிகர்கள்!

ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான  சென்னை…

32 minutes ago

தொடர் தோல்வியில் இருந்து மீண்ட சென்னை…லக்னோவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…

8 hours ago

தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி

ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…

9 hours ago

விஜயகாந்த் தலைமுறைகளைக் கடந்தும் நினைவு கூரப்படுவார்! பிரதமர் மோடி பதிவு!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…

9 hours ago

தனி ஆளாக போராடிய ரிஷப் பண்ட்! சென்னை அணிக்கு இது தான் இலக்கு!

லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…

10 hours ago

திமுக கூட தான் போட்டி…விஜய் 2-வது இடத்திற்கு வருவார்! தமிழிசை பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…

12 hours ago