கோட்சே ஒரு தேசபக்தர்-மக்களவையில் சர்ச்சையாக பேசிய பாஜக எம்.பி நீக்கம்

Default Image

நேற்று மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது .அப்பொழுது  திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில் பாஜகவின் எம்.பியான  பிரக்யா சிங் தாகூர்  குறுக்கிட்டு பேசினார்.அவர் பேசுகையில்,நடைபெரும் விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.மேலும்  கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் ,குழப்பம் நிலவியது.
ஏற்கனவே பிரக்யா சிங் தாகூர்  நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோட்சே குறித்த சர்ச்சைகுரிய வகையில் பேசியதால் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை  பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.கோட்சே குறித்த பிரக்யா தாக்கூரின் சர்ச்சைப் பேச்சுக்கு ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்