கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டதுஎன ராகுல் காந்தி ட்விட்.
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் மோசமடைந்து வந்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், ‘கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது. பீலே அரிய வகை விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தார். களத்திலும் வெளியேயும் ஒரு ஜாம்பவான். அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…