கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது – ராகுல் காந்தி

Default Image

கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டதுஎன ராகுல் காந்தி ட்விட். 

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து  அவரது உடல் மோசமடைந்து வந்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், ‘கால்பந்து அதன் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவரை இழந்துவிட்டது. பீலே அரிய வகை விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தார். களத்திலும் வெளியேயும் ஒரு ஜாம்பவான். அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்