கொரோனாவை ஒழிக்க இந்த 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – உலக சுகாதார அமைப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிருக்கும் கொரோனா வைரசால், இதுவரை உலகளவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,702 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,020 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,17,446 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ், மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்வது நோய் பரவலை கட்டுப்படுத்தி சுகாதாரத் துறையின் மீதான நெருக்கடியை குறைக்கும். ஆனால் கொரோனா தொற்றை முழுவதும் அழித்துவிட முடியாது என்றும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இந்த 5 முக்கிய வழிமுறைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கொரோனாவை பரவலை முழுவதும் அழிக்க 5 வழிமுறைகள் :

  1. சுகாதாரத் துறையை விரிவுபடுத்தி, சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு சமூகத்திலும் நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
  3. கொரோனா பரிசோதிக்கும் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
  4. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும்.
  5. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து, வேற யாருக்கு தொற்று பரவியிருக்கக் கூடும் என்பதை ஆய்வு செய்து சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago