மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளபாதிப்பால் உயரும் பலி எண்ணிக்கை..!-251 ஆக அதிகரிப்பு..!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 251 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100 பேரை காணவில்லை. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100 பேர் காணாமல் போய் உள்ளனர். இந்த மழையில் சிக்கி இதுவரை 25,581 விலங்குகள் உயிரிழந்துள்ளது.

மேலும், இந்த வெள்ளப்பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 2,30,000 பேர் வரை முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தங்க வைப்பதற்காக 259 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri