பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
பிளிப்கார்ட் ஃபேஷன் பொருட்கள்,மளிகை பொருட்கள், பிற பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக வாங்குவதற்கு ஒரு இடமாக உள்ளது . தனது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான திட்டங்களும், சலுகைகளும் அளித்து வருகிறது.சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய தயாரிப்புகள், விற்பனையாளர்களும் பொருட்களை விற்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ளது.இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இதன் மூலம் சில்லரை வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் பிரத்யேக தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்று கூறினார்.ஆகஸ்ட் மாதம் பிளிப்கார்ட் மொத்த விற்பனை செயல்படத் தொடங்கும்.ஃபேஷன் மற்றும் மளிகை பொருட்களின் விற்பனை முதல் கட்டமாக நடைபெறும்.பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஷர்ஷ் மேனன் இந்தப்பிரிவுக்கு தலைவராக இருப்பார்.இனி பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களாக வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…