சிக்கிமில் திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

sikkim flood

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, புதன் கிழமை (04.10.2023) தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து, அந்த 23 இந்திய இராணுவ வீரர்களில் ஒருவர் கண்டறியப்பட்டதாகவும், இப்பொது,  22 வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நேற்றய தினம் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வெள்ளப்பெருக்கினால் அதிக உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ப மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
donald trump harvard university
anil kumble Andre Russell
DMK senthil balaji
JDVance MEET PM MODI
Seeman
KKR VS GT