ஏழைகள் நல்வாழ்வு பெறுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொளி வாயிலாக ஐந்து ரூபாய் உணவு திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரம் மற்றும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், இதில் ஒரு கட்டமாக ஏழைகளுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்க கூடிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தில் 5 ரூபாய்க்கு பருப்பு உணவுகள் மற்றும் முட்டையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 15 ரூபாய் மானியமாக ஒரு உணவுக்கு செலுத்துகிறது. பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை சுய உதவிக்குழுவினர் சமையலறையை பராமரித்து உணவுகளை தயார் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இதற்கான சமையலறைகள் படிப்படியாக ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…