மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,இதுபற்றி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில்,மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுமார் 35 பேர் உயிர் இழந்துள்ளதாக தாக்கரே தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் இருந்து பெய்த கனமழையால் ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தாக்கரே தெற்கு மும்பையில் உள்ள மந்திராலயாவில் (மாநில செயலகம்) உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமையைப் பற்றி கேட்டறிந்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…