மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை மாநகராட்சியானது,கொரொனோ விதிமுறைகளை மீறியதற்காக 5 வீட்டுவசதி சங்கங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனோ 2ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த மும்பையின் குடிமை அமைப்பு, ஏப்ரல் 5ம் தேதி புதிய விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது.
இந்த வழிகாட்டுதல்களின்படி,கொரொனோ கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் வீட்டுவசதி சங்கத்தின் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நவி மும்பை மாநகராட்சி (NMMC) எச்சரித்துள்ளது.அதாவது முதல் முறை மீறலுக்கு ரூ.10,000 விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே தவறை செய்யும் சங்கங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குடிமை அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும்,வீட்டுவசதி சங்கங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டல விதிமுறைகளை மீறினால், குடிமை அமைப்பு ஒவ்வொரு முறையும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடமிருந்து ரூ.50,000 வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அபிஜித் பங்கர் தெரிவிக்கையில்,”அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, கொரொனோ கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நுழைய தடை செய்ய வேண்டும்,இந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மக்களின் பொறுப்பாகும்” என்று கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…