Categories: இந்தியா

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.!

Published by
மணிகண்டன்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், பிரம்மகால் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன.

இந்த சுரங்கமானது கடந்த 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த சமயம் சுரங்க பணியில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் 41 பேர் வெளியில் வரமுடியாமல் சிக்கினர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

அவர்களை மீட்க, முன்னதாக தோண்டப்பட்ட சுரங்கபாதையில் இடையில் பாறை இருந்தததால் மீட்பு பணி தடைபட்டது. இதற்கிடையில் சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான 6 அங்குல அகலமுடைய பைப் போடப்பட்டுள்ளது.

அதன் வழியாக தற்போது வரை ஆக்சிஜன், உலர் பழங்கள், தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது அந்த சிறிய அளவிலான பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமிராவை உள்ளே அனுப்பி அவர்களின் நிலையை கேமிரா வழியாக கண்டு தொடர்பு கொண்டுள்ளனர்.  சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்களை மீட்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக , சுரங்கத்திற்கு செங்குத்தாக இன்னொரு சுரங்கம் தோண்ட மீட்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், வீடியோ மூலம் , தாங்கள் நலமுடன் தைரியமாக உள்ளதாகவும் நீங்கள் (தொழிலாளர்களின் குடும்பத்தார்) யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

20 minutes ago

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

34 minutes ago

பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள்.!

ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…

2 hours ago

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

3 hours ago