Categories: இந்தியா

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.!

Published by
மணிகண்டன்

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், பிரம்மகால் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன.

இந்த சுரங்கமானது கடந்த 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த சமயம் சுரங்க பணியில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் 41 பேர் வெளியில் வரமுடியாமல் சிக்கினர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

அவர்களை மீட்க, முன்னதாக தோண்டப்பட்ட சுரங்கபாதையில் இடையில் பாறை இருந்தததால் மீட்பு பணி தடைபட்டது. இதற்கிடையில் சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான 6 அங்குல அகலமுடைய பைப் போடப்பட்டுள்ளது.

அதன் வழியாக தற்போது வரை ஆக்சிஜன், உலர் பழங்கள், தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது அந்த சிறிய அளவிலான பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமிராவை உள்ளே அனுப்பி அவர்களின் நிலையை கேமிரா வழியாக கண்டு தொடர்பு கொண்டுள்ளனர்.  சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்களை மீட்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக , சுரங்கத்திற்கு செங்குத்தாக இன்னொரு சுரங்கம் தோண்ட மீட்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள், வீடியோ மூலம் , தாங்கள் நலமுடன் தைரியமாக உள்ளதாகவும் நீங்கள் (தொழிலாளர்களின் குடும்பத்தார்) யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

25 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

1 hour ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

1 hour ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

2 hours ago