குடும்பத்துடன் வாக்களித்த அமித்ஷா.! வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்ட முக்கிய வேண்டுகோள்.!

Default Image

முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும். – மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். 

குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட (இறுதிக்கட்ட) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி தொகுதியிலின் தனது வாக்கினை செலுத்தினார்.

அடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாக்கினை அகமதாபாத்தில் தனது மகன் ஜெய்ஸா  உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தகுதியுள்ள அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிலும், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்