இன்று முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா காட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 50 சதவீதம் மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…