மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்து வரக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொன்றாக கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கபிபடாமலேயே இருந்தது.
மேற்கு வங்கத்திலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இதனை அடுத்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை, சனிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…