புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு..!

Default Image

இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கவுள்ள நிலையில் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை ஏறணும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரைநாள் இயங்கிவந்த 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு இன்று முதல் முழு நேர வகுப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்