கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தெலுங்கானாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அம்மாநில அரசுகள், வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.61 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த கொரோனா தோற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 42 ஆயிரத்து 853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தெலுங்கானாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் இந்த மாத இறுதி (ஏப்.30) வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…