அடுத்த 10 நாளில் முதல்கூட்டம்.,குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்கனும் – உச்சநீதிமன்றம் ஆணை!

Published by
பாலா கலியமூர்த்தி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.

விளைபொருட்களான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கான மொத்த செலவும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதத்திற்குள் இறுதி முடிவை எடுக்கவேண்டும் என விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள குழுவிற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இயல்புநிலைக்கு திரும்பவேண்டும். வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கை 8 வார காலத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜித்தேந்தர் சிங் மன், பிரமோத் குமார் ஜோஷியும், அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வத் ஆகியோர் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், வேளாண் சட்டம் திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்தல் என கோரிக்கைகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

43 minutes ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

55 minutes ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

1 hour ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

1 hour ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

2 hours ago

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

2 hours ago