கொரோனாவில் இருந்து மீண்ட முதல் இந்திய மாணவி.! விரைவில் வீடு திரும்புவார்.? மருத்துவர்கள் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் மட்டும் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 0.2 சதவிகிதப் பாதிப்புடன் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் படித்து வந்துள்ளார். அங்கு வைரஸின் தொற்று காரணமாக அவர் அங்கிருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடன் வந்த  2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உட்பட மற்ற இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முதலில் வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவருக்கு 5 முறை மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தைப்பூச திருவிழா கோலாகலம்.., அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!

தைப்பூச திருவிழா கோலாகலம்.., அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!

சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…

16 minutes ago

பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…

10 hours ago

தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!

சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…

11 hours ago

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

12 hours ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

12 hours ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

13 hours ago