நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும், உலகம் முழுவதும் இந்த தொற்றுக்கு 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த 73 வயது முதியவர் ஓமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாகவும், அவருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…