Categories: இந்தியா

சிறைக்காவல் முடிந்து முதல் பிரச்சாரம்.! அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்தடுத்த நகர்வுகள்…

Published by
மணிகண்டன்

Arvind Kejriwal : இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இடைக்கால நிவாரணமாக ஜூன் 1ஆம் தேதி வரையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எதுவாக இந்த இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இடைக்கால ஜாமீன் காலத்தில் , டெல்லி முதல்வராக அலுவலகம் செல்லவோ,  அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திடவோ கூடாது எனவும், வழக்கு குறித்து பேசவோ, வழக்கு தொடர்பானவர்களை சந்திக்கவோ கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பேசினார். அதன் பிறகு வீடு திரும்பிய கெஜ்ரிவால் தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கெஜ்ரிவால் இன்று மாலை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உடன் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கிடையில்,  இன்று மதியம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

25 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago