Categories: இந்தியா

மணிப்பூர் முதல்வரின் கான்வாய் மீது துப்பாக்கி சூடு! அடுத்து நடந்தது என்ன?

Published by
அகில் R

மணிப்பூர்: இன்று காலை மணிப்பூரின் கங்போபி மாவட்டத்தை அடுத்து கோட்லென் கிராமத்தின் அருகே மணிப்பூர் முதல்வரான பைரன் சிங்கின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இன்னும் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் போராட்டக்காரர்கள்  நடத்தி இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு உடலில் குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. பாதுகாப்பு வாகனங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியிலிருந்து, இம்பால் செல்லும் முதல்வர் பைரன் சிங், ஜிரிபம் மாவட்டத்தை ஆய்வு செய்ய செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அப்போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று (ஜூன். 8) இதே போல மற்றொரு சம்பவமாக 2 காவல் சோதனைச் சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளைப் போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
அகில் R

Recent Posts

புதிய உச்சத்தைத் தொட்டது ஆபரணத் தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதுவரை…

1 min ago

மக்களே! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

சென்னை : லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

17 mins ago

எண்ணெய் கிடங்கை குறிவைக்கும் இஸ்ரேல்? உச்சம் அடையப் போகும் கச்சா எண்ணெய் விலை?

லெபனான் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு என்பது பெரிதளவு இருந்து வருகிறது. இந்த…

32 mins ago

“புதிய மழைநீர் வடிகால் பணிகள் வேண்டாம்., 6 படகுகள் ரெடி.” சென்னை மேயர் பிரியா அப்டேட்.!

சென்னை : ஆண்டுதோறும் நவம்பர் , டிசம்பர் மாதம் வருகிறது என்றாலே பருவமழை பொழியும், குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும்…

35 mins ago

“வெற்றி சாலையில் விரைவில் சந்திப்போம்.,” தவெக மாநாட்டிற்கு விஜய் அழைப்பு.!

சென்னை : த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

36 mins ago

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற பூமி பூஜை.! தவெக மாநாடு பணி தீவிரம்.!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை…

1 hour ago