தடை விதிக்கப்பட்ட சில நாட்களில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அண்மையில், சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹரியானாவில் வெளிநாடுகளில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளிக்கு முன்னதாக பல மாநிலங்களில் பட்டாசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்நேற்று மக்களை 2 மணி நேரம் விற்கவும் பட்டாசுகளை வெடிக்கவும் அரசாங்கம் அனுமதிக்கும் என்று அறிவித்தார். இருப்பினும், தீபாவளியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்கபடும் நேரத்தை அவர் குறிப்பிடவில்லை.
நேற்று செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், “மாசுபடுதலுடன் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன. எனவே பட்டாசுகள் வெடிப்பது குறித்து கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், பட்டாசுகளை விற்க விரும்புவோருக்கு அவற்றை வெடிக்கவும் விரும்புகிறோம். இந்நிலையில், 2 மணி நேரத்தில் வர்த்தகர்கள் பட்டாசுகளை விற்க அனுமதியளிக்கப்படுகிறது என்று கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…