தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகவும் ,ஒரு சில இடங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை விற்கவும் , வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திரா மாநிலத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி , பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில தலைமை செயலாளர் நிலம் சாவ்னியின் ஒப்புதலின் படி , மாநில சுகாதார மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறையால் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு பச்சை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும், தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கும் ஆந்திரா அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…