மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 பேர் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வாசைஎன்ற இடத்தில் உள்ள கொரோனா மையத்தின் ஐசியு வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர் திலீப் ஷா தெரிவித்தார். நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் அதிகமானனோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 67,000-க்கும் மேற்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா தொற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…