டெல்லியில் கன்று குட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு!

Default Image

டெல்லியில் கன்றுக்கட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

டெல்லி கிழக்கு பகுதியில் கன்று குட்டி ஒன்றை ஒருவர் அடிப்பது குறித்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நிலையில் கிடந்த கன்றுக்குட்டியை காப்பாற்றி மருத்துவ பரிசோதனைக்காக அருகிலிருந்த சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், புதா மார்க் மண்டவாலியில் வசிக்கும் கமல் சிங் என்பவர்தான் கன்றுக்குட்டியை அடித்தவர் என தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TVK -AmitShah
mutharasan cpi tvk vijay
Shoaib Akhtar
aadhav arjuna and vijay
annamalai about vijay
AFG vs ENG - Champions Trophy 2025
TVK Leader Vijay speech at TVK First Anniversary Function