சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள் என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலில் போட்டு நசுக்கினார் எனவும் அவர் மறைமுகமாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது சீக்கியர்கள் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது மத நம்பிக்கைகளை அவமதிப்பது மூலம் சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…