தவறான பிரச்சாரம்.! ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர்.!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். கொரோனில்(Coronil) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. அந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா 7 நாட்களில் குணமடையும் என பதஞ்சலி கூறியது.

இந்த மருந்தை 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுமையாக குணமடைந்தாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். இதையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கவேண்டும் .

அதைப் பரிசோதனை செய்து ஆய்வில் உண்மையான பின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும். அதுவரை விளம்பரம் செய்யக்கூடாது என கூறி மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியது.

லட்சக்கணக்கானக்கனோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏமாற்றும் வகையிலும் கொரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்