ரூ.1 லட்சம் வரை அபராதம்.! விதிகளை மீறினால் அபராதம் இரட்டிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்மொழியப்பட்ட ஒலி மாசு விதிமுறைகளை மீறுவதால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒலி மாசு விதிகள் குறித்து ஆராய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் உத்தரவிட்டார். ஒலி மாசு மீறல்களுக்கு தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த அபராதங்களை நாடு முழுவதும் அமல்படுத்த சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒலி மாசு விதிமுறைகளை மீறுவோருக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் பொது முகவரி அமைப்புகளை கைப்பற்றவும், ரூ.10,000 அபராதம் விதிக்கவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) எடுத்துரைத்துள்ளது. அதில், 1000 கே.வி.ஏ க்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வரும் ஒலி மாசுபாட்டிற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் கட்டுமான இடங்களில் அனுமதிக்கப்பட்ட சத்தத்திற்கு மேல் எழுப்பினால் உபகரணங்கள் பறிமுதல் செய்யவும், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் பகலில் சத்தம் அளவு 55 டெசிபல் மற்றும் இரவில் 45 டெசிபல் என அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கடும் அபராதம் விதிக்கவும் மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 மற்றும் silence மண்டலத்தில் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படலாம். தொழில்துறை பகுதிகளில் சத்தம் அளவு பகலில் 75 டெசிபல் மற்றும் இரவில் 70 டெசிபல் வரை இருக்கலாம். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற சத்தம் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் வரை அதிகமாக இருக்கலாம். பொது பேரணி அல்லது ஊர்வலத்தில் இதே குற்றத்திற்கான அபராதம் முறையே குடியிருப்பு மற்றும் silence மண்டலங்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.20,000 ஆகும்.

ஒரு நிலையான வளாகத்திற்குள் விதிகள் மீண்டும் மீறப்பட்டால் அபராதம் ரூ.20,000 ஆக இரட்டிப்பாகும். ஒரே தவறை இரண்டு முறைக்கு மேல் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சிபிசிபி தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளது. இதற்கான விதிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

2 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago