நிதியமைச்சர் அறிவித்த இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.
சமீபத்தில் பிரதமர் மோடி பொருளாதார சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், இந்த நிதியால் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.
அதன்படி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை கடந்த புதன்கிழமை முதல் வெளியிட்டு வந்தார். அதில், சிறு, குறு தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, 100 வேலை திட்டம், ஆகியவற்றிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், நிதியமைச்சர் அறிவித்த இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…